தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஓசியா 14:2

வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய  நம்முடைய பலிகள் தேவனுக்கு ஸ்தோத்திரபலி செ லுத்தவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் தேவனே நியாயாதிபதியாக விளங்குகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

சங்கீதம் 50:7-24

என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.

உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.

சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் (வஞ்சனையை) பிணைக்கிறது.

நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

மேற்கூறபட்ட வசனங்களில் கர்த்தர் சொல்வது என் ஜனமே, கேள் நான் பேசுவேன்; இஸ்ரவேலே உனக்கு விரோதமாக சாட்சியிடுவேன், நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன் என்கிறேன்.  நாம் கர்த்தருக்கு செலுத்துகிற தகனபலிகளினிமித்தம் அவர் நம்மை கடிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்; ஏனென்றால் நாம் செலுத்துகிற பலி எப்போதும் அவருக்கு முன்பாக இருக்கிறது என்கிறார்.  மேலும் அவர் சொல்வது நம்முடைய வீட்டிலிருந்து காளைகளையும், தொழுவங்களிலிருந்து ஆட்டு கடாக்களையும் வாங்கி கொள்ளமட்டார்.  ஏனென்றால் எல்லா வகை  காட்டு மிருகங்களும், பறவைகளும், வெளியில் நடமாடுகிறவைகள் எல்லாம் அவருடையவைகள்.  ஆதலால் அவர் சொல்வது நான் பசியாயிருந்தால் உனக்கு சொல்லேன் என்றும், எருதுகளின் மாம்சம் தின்று ஆட்டுகடாக்களின் இரத்தம் குடிப்பதில்லை என்கிறார்.  ஆதலால் நம்மிடம்  கர்த்தர் சொல்வது நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு பொருத்தனை செலுத்தி; ஆபத்து காலத்தில் கர்த்தரை நாம் கூப்பிட்டால் அவர் நம்மை விடுவித்து இரட்சிப்பார்; மேலும் தேவனாகிய கர்த்தர் ஒருவரே நம்முடைய தேவன் ; அவரே நம்மை எல்லா இக்கட்டிலிருந்தும் விடுவித்து இரட்சிக்கிறவர்.  ஆகையால் பூச்சக்கரத்து குடிகள் எல்லாம் அவருடையவைகள்.  ஆதலால் வீட்டில் உள்ள பலிகளில் அவர் பிரியப்படுவதில்லை.  ஆதலால் தேவனுக்கு நம்முடைய உள்ளம் பரிசுத்தபடுத்தி, அங்கிருந்து தேவனுக்கு ஸ்தோத்திரபலிகளை செலுத்த வேண்டும். ஆகையால்  நாம் தேவனை சபையாக ஒருமித்து மகிமைபடுத்தும்படியாக  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.