தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 16:18

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பாதாளத்தின் வல்லமையினின்று மீட்கபட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவினால் மகிழ்ச்சியின் நகரமாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

சங்கீதம் 49:1-5 

ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.

என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.

என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?

மேற்கூறபடட வசனங்களில் கர்த்தர் ஜனங்களை நோக்கி: எல்லாரும் எனக்கு செவிக் கொடுங்கள் என்றும், அவர் வாய் ஞானத்தை பேசும், என் இருதயம் உணர்வை தியானிக்கும்: அவர் தமது செவியை உவமை மொழிக்குச் சாய்த்து; என் மறைப் பொருளைச் சுரமண்டலத்தின் மேல் வெளிப்படுத்துவேன் என்றும்; என்னை தொடர்ந்துக் கொள்ளுகிறவர்களுடைய அக்கிரமம் என்னை சூழ்ந்துக்கொள்ளும், தீங்கு நாட்களில் நான் பயப்பட வேண்டியதென்ன என்கிறார்.  மேலும் கர்த்தருடைய வார்த்தையாவது 

சங்கீதம் 49:6-19 

தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,

ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,

எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.

அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.

ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.

ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.)

ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)

ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.

அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.

அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்,

அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.

மேற்கூறபட்ட வார்த்தைகள் என்னவென்றால் தங்கள் செல்வத்தை நம்பி வாழ்கிறவர்களின் நிலமை கேடாக மாறும் என்பதனை கர்த்தர் தெளிவுப்படுத்துகிறார்.  அதனைக்குறித்து கர்த்தர் சொல்வது கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகளை கருத்தோடு தியானித்து, நம்முடைய நிலங்களுக்கோ, வீடுகளுக்கோ மனிதர்களாகிய யாருடைய நாமங்களாகிய பெயர்கள் எழுதபடாமல் ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ள வேண்டும்.  ஏனென்றால் அவ்விதம் நம் நாமங்களாகிய பெயர்கள் எழுதுவோமானால் அவர்கள் ஆட்டுமந்தைகளைப் போல் பாதாளத்தில் கிடத்தப்படுகிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  அவர்கள் ரூபத்தை பாதாளம் அழிக்கும் என்னப்படுகிறது.  ஆதலால் இதனை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இவ்விதம் நாம் நம்முடைய நாமங்கள் பூமியில் நிலங்களில் எங்கேயாவது எழுதப்பட்டுயிருப்போமானால், இப்போதே மனந்திரும்பி பாவ அறிக்கை செய்துக் கொண்டு நாமங்களை அந்த இடங்களிலிருந்து மாற்றிக் கொண்டால் நம்முடைய ஆத்துமாவை தேவன்  பாதாளத்தின் வல்லமையினின்று விலக்கி மீட்பார்; அவர் நம்மை ஏற்றுக்கொள்வார்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.