தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:133 

உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் கிறிஸ்துவினால் மகிழ்ச்சியின் நகரமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,  மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து கேடகமாயிருக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

சங்கீதம் 48:1-8 

கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.

அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)

மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும்போது, கர்த்தர் பெரியவராகவும், நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கபடதக்கவர்.  மேலும் எழுதபட்டவைகள் தேவனுடைய ஸ்தானமும், அவரே மகா ராஜா என்பதும் மகா ராஜாவின் நகரத்தில் எவ்வித தோற்றங்கள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடதக்கவைகள். மேலும் கூறபட்டிருக்கிறவைகள் என்னவெனில் பூமியின் ராஜாக்கள் கூடிவரும் போது, அவர்களால் அந்த தேவனுடைய நகரத்தில் நிற்க முடியாமையால், அதனை கண்ட போது பிரமித்து கலங்கி விரைந்தோடி போனார்கள்.  மேலும் அவர்கள் நடுக்கங்கொண்டு, பிரசசவ வேதனைபடுகிற ஸ்திரீயை போல்  வேதனைப்படுகிறார்கள். கீழ்காற்று (பாதாளத்திற்கு நேராக) காற்று வீச செய்து, பாதாளம் என்பது நம்முடைய உள்ளத்தின் பிசாசின் கிரியைகள் என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு நேராக தேவன் தம்முடைய ஆவியை அனுப்பி தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறார்.   தர்ஷீசின் கப்பல் என்பது தங்கள் பொருள் சம்பாத்தியத்திற்காக காசுக்காகவும், பணத்திற்காகவும் தங்கள் நினைவுகளை வைத்துக்கொண்டு தேவனுக்கென்று ஊழியஞ்செய்கிறவர்கள் (பிலேயாமை போல) அந்த நினைவுகளை கர்த்தர் உடைக்கிறார் என்பதனை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.    இந்த காரியம் தேவனுடைய நகரமாகிய சேனைகளின் கர்த்தரின் நகரத்திலே கண்டோம்  என்று  சொல்வதும் குறிப்பிடதக்கவைகள், ஆதலால் தேவன் தாமே அதனை ஸ்திரப்படுத்துவார்.  மேலும் கிறிஸ்து சொல்வது 

சங்கீதம் 48:9-11 

தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

மேற்கூறபட்ட மகத்தான தேவனுடைய செயல்கள் எல்லாம் பின்வரும் சந்ததிக்கு அதன் அலங்கத்தை கவனித்து அதன் அரண்களை உற்று பார்த்து (கிறிஸ்துவின் சாட்சி பூலோகத்தில்) நாம் நடந்தால் நம்முடைய தேவன் எனெறன்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்;  என்பதனை நாம் முழுமையாக விசுவாசித்தால் அவர் நம்மை மரணபரியந்தம்  நம்மை நடத்துவார்.  இப்படியாக தேவனுடைய நகரமாகிய கிறிஸ்து வாசம் பண்ணுகிற நம்முடைய உள்ளம் மகாராஜாவின் நகரமாகவும், அதுவே மகிழ்ச்சியின் நகரமாகவும் குறிப்பிடதக்கவைகள்.  ஆதலால் அதில் தீமையான கிரியைகள் இல்லாமல் நம்மை கர்த்தர் பாதுகாக்கிறவர்;  இவ்விதம் கர்த்தர் நம்மை மரணபரியந்தம் நடத்தும்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.