தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 18:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து கேடகமாயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு தேவன் உயர்ந்த அடைக்கலமாக இருக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 47:1-9 

சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.

ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)

தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

மேற்கூறபட்ட வசனங்களில் கரத்தரை நாம் எப்படி மகிமைப்படுத்தி ஆராதிக்க வேண்டும் என்றும்; அப்போது அவர் நம்மில் எப்படி கிரியை செய்வாரென்றும் நமக்கு விளங்கும்.  அதுவுமட்டுமல்லாமல் நம்மில் அவர் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்றும், நாம் ஆபிரகாமின் சந்ததியாக சேர்த்துக் கொள்ளப்பட்டு; தேவனுடைய ஜனங்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறோம். அப்படியாக அவர் ஜனங்களாக நாம் இருக்கையில் நாம் அவருடைய கேடகமாகிறோம்.  நம்மில் அவர் மகா உன்னதர்.  

பிரியமானவர்களே மேற்கூறபட்ட வசனங்களில்  கூறபட்டவைகளி்ன்படி நம்மை தேவனுடைய கேடகமாக நம்மில் கிறிஸ்து விளங்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.