தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1 தீமோத்தேயு 1:14
நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தரின் கிருபை சூழ்ந்துக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் கர்த்தருக்குள் ஸ்திரபடுத்தப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 32:1-3
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
மேற்கூறபட்ட வசனங்களில் கூறபட்டவைகள் மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதம். இசசங்கீதம் போதகராக கிறிஸ்து நம்மில் வெளிபட்டு கூறப்படுகிறவைகள் சங்கீதமாக பாடப்பட்டுள்ளது. என்னவென்றால் கர்த்தராகிய தேவன் யாருடைய மீறுதலை மன்னிக்கிறாரோ, யாருடைய பாவத்தை மூடுகிறாரோ அவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டுள்ளது. யாருடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, யாருடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறாரோ அவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்கிறார். என்னவென்றால் இதன் பொருள் தேவன் யாரையும் அவ்விதமாக விடுகிறவரல்ல. ஏனென்றால் அவர் பட்சபாதமுள்ளவரல்ல என்பதனை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அல்லாமலும் நம்முடைய பாவங்கள், மீறுதல்கள், அக்கிரமங்கள் இவைகள் தேவன் மன்னிக்கும்படியாக கிறிஸ்து நித்தமும் அடக்கி வைத்தாலும் கதறுகிறதினால் எலும்புகள் உலர்ந்து போகிறது என்கிறார். மேலும் நமக்காக கிறிஸ்து நம்மிலிருந்து பரிந்து பேசுகிற சத்தமாவது
சங்கீதம் 31:4-7
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
மேற்கூறபட்ட தேவனுடைய வார்த்தையாவது, நம்முடைய பாவம், மீறுதல், அக்கிரமம் இவற்றை கர்த்தராகிய தேவன் கிறிஸ்துவினால் நமக்காக மன்னித்து, எல்லா இக்கட்டுக்கும் விலக்கி மீட்டு, அவரை இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துக் கொள்ளும்படி செய்கிறார். மேலும் கிறிஸ்து நம்மிடத்தில் சொல்வது
சங்கீதம் 32:8,9
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
அல்லாமலும் அவர் சொல்வது துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துக்கொள்ளும மேலும் சபையாரை பார்த்து நீதிமான்களேக் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள் செம்மையான இருதயமுள்ளவர்களே நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள் என்கிறார்.
பிரியமானவர்களே, நாம் யாவரும் கர்த்தரை ஆனந்த முழக்கத்தோடு மகிமைப்படுத்த வேண்டும். இவ்விதமாக கர்த்தரை ஆனந்த முழக்கத்தோடு மகிமைபடுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.