தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 40:31 

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் விண்ணப்பங்களோடு கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் பெற்றுக்கொள்ளுதல். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய நடத்தைகள் செம்மையானதாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

சங்கீதம் 27:1-6 

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?

என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நம்முடைய வெளிச்சம், ஜீவன்,பெலன்.  ஆகையால் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டாம்.  எவ்விமான சத்துருக்கள் நம்மை நெருக்கினாலும் யாருக்கும் பயப்படவேண்டாம்.  ஏனென்றால் நம்மை நெருக்குகிற சத்துருக்களே இடறி விழுவார்கள்.  நமக்கு விரோதமாக எந்தவிதமான சத்துருக்கள் பாளயமிறங்கினாலும் நாம் பயப்பட வேண்டாம் நமக்கு விரோதமாக யுத்தம் எழும்பினாலும் கர்த்தரிடத்தில் மட்டும் நாம் நம்பிக்கையாயிருந்து; அவரிடத்தில் ஒரு காரியத்தை கேட்க வேண்டும்.  நாம் கேட்டக்காரியத்தை நாடிக்கொண்டு, கர்த்தரின் மகிமையை நாம் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியியிருப்பதேயே நாட வேண்டும்.   இப்படியாக நாம் இருப்போமானால் கர்த்தர் நம்மை அவருடைய கூடாரமாகிய கிறிஸ்துவின் சரீரத்திற்குள் மறைத்து, ஒளித்து வைத்து கன்மலையின் மேல் உயர்த்துவார்.  அப்போது கிறிஸ்துவாகிய தலை என்னை சுற்றிலும் இருக்கிற சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும். மேலும் கிறிஸ்துவின் விண்ணப்பமானது 

சங்கீதம் 27:7-14 

கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.

என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.

உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.

என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

மேலே எழுதப்பட்டுள்ள கர்த்தரின் வார்தைகளினால் நாம் கர்த்தருக்கு காத்திருக்கும் போது, அவர் நம்முடைய இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.  ஆதலால் பிரியமானவர்களே,  திடமனதாயிருந்து கர்த்தருக்கு காத்திருந்து புது பெலன் அடையும்படியாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.