தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 1கொரிந்தியர்  15:55

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நமக்கு நாமே குழிவெட்டாமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அக்கிரம செய்கைகளை விட்டு இரட்சிப்பில் களிகூர்ந்து மகிழ வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 7:1-17 

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.

என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,

என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,

பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா.)

கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.

ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.

கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.

இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

மேற்கூறபட்ட வசனங்களில் (பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கி பாடின சிகாயோன் என்னும் சங்கீதம்) இந்த வார்த்தைகளை நாம் கருத்தாய் தியானிக்கும் போது தாவீது தனக்கு எதிராக கூஷ் என்பவன் எதிர்த்து பேசின வார்த்தைகளினிமித்தம்  அவன் தன் வருத்தத்தினால் அவனுடைய ஆத்துமா சிறைபட்டு போகாதபடி கரத்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணி பாடின சங்கீர்த்தனம்.  இந்த சங்கீதத்தில் செம்மையான இருதயம் நமக்கு இருக்க வேண்டும், தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, நாள்தோறும் பாவியின் மேல் சினங்கொள்ளுகிற தேவன்.  நாம் பொல்லாத இருதயம் உள்ளவர்களாக இருப்போமானால் நாம் மனந்திரும்பி கர்த்தரின் வசனங்களுக்கு கீழ்படிய வேண்டும்.  கீழ்படியாதவர்கள் மேல் அவருடைய வசனமாகிய பட்டயம் நியாயந்தீர்க்கும்.  அப்படி நியாயந்தீர்த்து மரணாயுதங்களை ஆயத்தம் பண்ணினார்.  தம்முடைய அம்புகளை (வார்த்தைகளை) அக்கினி அம்புகளாக்கினார்.  ஆதலால் அவர்கள் அக்கிரமத்தை கர்ப்ப வேதனையோடே பெற்று, தீவினையை கர்ப்பந்தரித்து தங்கள் வாழ்வில் பொய்யை அடைக்கலமாக்கி கொள்கிறார்கள்.  ஆதலால் அவர்கள் தங்களுக்கு குழியை(பாதாள) வெட்டி அதனை ஆழமாக்கினார்கள்.  அதனை குறித்து தான் வெட்டின குழியில் தானே விழுந்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் நம்முடைய ஆத்துமா பாதாளத்தின் வயிற்றில் கிடத்தப்பட்டிருக்கிறது.  இதனைக் குறித்து தான் அவன் தீவினை அவன் உச்சந்தலையின் மேல் இறங்கும் என்னப்படுகிறது.  ஆதலால் நாம் ஒவ்வொருவரும் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.