தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 4:7

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவாகிய பரலோக ஞானமும் புத்தியும் உள்ளவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,  மணவாட்டி சபையாகிய நாம் ஜீவ வழியில் எப்போதும் நடப்போம் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 28:12-13 

ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?

அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.

மேற்கூறபட்ட வசனங்களில் யோபு சொல்கிற பிரசங்க வாக்கியம் தொடர்ந்து சொல்வது ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது என்று சொல்லி, அதன் விலை மனுஷருக்கு தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை. மேலும் கூறப்பட்டுள்ள வசனங்களில் 

யோபு 28:14-23

ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.

அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.

ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.

பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.

பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.

எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.

இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?

அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.

நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.

தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.

  -ல் எழுதப்பட்டுள்ளது, ஞானத்திற்கும் புத்திக்கும் ஒப்பாக எந்த விலையேறபட்ட பொருட்கள் நிகரல்ல என்றும், அது ஜீவனுள்ள எல்லோருடைய கண்களுக்கும் ஒளித்து இருக்கிறது, ஆகாசத்து பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.  நாசமும் மரணமும் (பிசாசு) நாங்கள் எங்கள் காதுகளினாலே மாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.  தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.  அல்லாமலும் கர்த்தர் செய்வது 

யோபு28:24-26 

அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.

அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,

மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,

மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தத்திற்குரியதும், நம்முடைய வாழ்வில் ஞானமும் புத்தியும் எங்கேயிருந்து பெற்றுக்கொள்ள  வேண்டுமென்பதும் கர்த்தர் நமக்கு தந்து அதனை பெற்றுக்கொள்ளும்படியாக பெரிய போராட்டத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியான போக்கை உண்டாக்குகிறார்.  அதென்னவெனில் 

பிரியமானவர்களே, நாம் ஆண்டவருக்கு எப்போதும் பயப்படவேண்டும்; முக்கியமாக யாருக்கும் பொல்லாப்பு செய்யக்கூடாது என்பதும் கூறபட்டு ஞானம் என்பது கிறிஸ்து என்றும், புத்தி என்பது பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியாகவும் விளங்குகிறார்.  அவ்விதம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வந்து வாசம்பண்ணி நம்மை பரிசுத்தப்படுத்துவார்.  அவ்விதம் பரிசுத்தமான வாழ்க்கை  நாம் வாழ்வோமானால் நம்முடைய வாழ்வில் இருக்கிற எல்லா போராட்டத்தையும்  கர்த்தர் மாற்றுவார். நாம் ஞானமும் புத்தியும் உள்ளவர்களாக வாழும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.