தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 6:23

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஜீவ வழியில் எப்போதும் நடப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை குவித்து வைக்கக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 28:1-11 

வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.

இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.

மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.

கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்.

பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினது போலிருக்கும்.

அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.

ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை;

துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.

அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.

கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.

ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.

மேற்கூறிய வசனங்களில் யோபு கூறிய பிரசங்க வாக்கியங்கள் தொடர்கிறது; அவைகள் என்னவென்றால் கர்த்தர் மனுஷனை எவ்விதம் புடமிடுகிறார் என்றும், எப்படி உள்ளிந்திரியங்களையும், இருதயங்களையும் சோதித்தறிகிறார் என்றும், மனிதன் எப்படி தன் ஆத்துமாவை  பலவித இக்கட்டுகளிலிருந்து விடுதலையாகிறான் என்பதும், அவன் அந்தகாரத்திலும், மரண இருளிலும் வாழ்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலையாகி அவற்றிற்கு முடிவுண்டாக்குகிறான் என்றும், கடக்கக்கூடாததும், நினையாததுமான ஆறு எழும்பினாலும்(போராட்டம் வந்தாலும்) உழைப்பாளியானவன்(கர்த்தரின் ஊழியக்காரன் அதை மனுஷரால் மாற்றுகிறான்.  அவ்விதம் இருக்கும் போது மனுஷனுடைய உள்ளம் உள்ளத்தில் பரலோகத்தின் ஆகாரம் விளையும்.  அவ்விதம் வேதவசனத்தால் நிறையும் போது அதன் கீழடங்கியிருக்கிறவைகளாகிய அந்நிய கிரியைகளாகிய உலகத்தின் ஆவி கர்த்தரின் வார்த்தையாகிய அக்கினியால் மாறினது போலிருக்கும். அப்போது அவனுடைய ஆத்துமாவாகிய கல்லுகளில் இந்திர நீலம் விளையும் (ஆத்துமாவில் கர்த்தரின் மகிமை நிரப்பப்படும்); அதின் பொடிகளில் பொன் பொடிகளும் உண்டாயிருக்கும்(ஆத்துமாவின் நினைவுகளின் தோற்றமெல்லாம் மகிமையுண்டாயிருக்கும்.  இந்த காரியம் நிறைவேறுவதற்கு ஒரு வழியுண்டு, அது எந்த பட்சிக்கும் (பிசாசானவனுக்கும்) தெரியாது; வல்லூறின் கண்ணும் அதை கண்டதில்லை.  துஷ்ட மிருகங்களின்(உலகத்தின் ஆவி) அதில் படவில்லை.  சிங்கம்(துர் உபதேசம்) அதை கடந்ததில்லை.  அவன் தன் கைகளை கற்பாறையின் மேல்நீட்டி, மலைகளை (உலகம்) வேரோடே புரட்டுகிறான். கன்மலைகளுக்குள்ளும் நீர்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.  ஒரு துளியும் கசியாதபடி நீர்க்கால்களை  அடைக்கிறான்.  மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டு வருகிறான்.  இப்படியெல்லாம் சொல்வது என்னவென்றால்;  ஒரு வழியுண்டு என்று எழுதப்பட்டிருப்பது, அது தான் அந்த ஜீவ வழி; அவர் தான் கிறிஸ்து;அவர் தான் ஜீவ  பாதை; இந்த பாதையில் நடப்போமானால் அவரில் உலகத்தின்  ஆவி கிடையாது, அவருடைய வசனம் சத்தியம், பொய் உபதேசம் (துர் உபதேசம் அவரில் இல்லை).  எப்படிபட்ட மனுஷனாகயிருந்தாலும் அவனுடைய  உள்ளத்தில் நீர்கால்களாகிய கிறிஸ்துவின் ஜீவ வசனம் செல்லும்.  அப்படி கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் எந்த ஒன்றும் மறைவிடத்திருந்தாலும் வெளிச்சத்திலே  கொண்டு வருகிறான்.  ஆதலால்

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வார்த்தைகள் கற்றுக்கொண்டு அதன் பிரகாரம் கிறிஸ்து நம்முடைய வாழ்வின் எல்லா வழியும் அவர் வழியாக(கட்டளை, கற்பனை, வேதம், வசனம்)வாழ்வோமானால்  ஜீவ வழியில் நடப்போம்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.