தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 4:10

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா மிகவும் தாழ்மைப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்க்கையில்  மனுஷர்களும், மனுபுத்திரர்களும் தேவனுக்கு ஒப்பாக முடியாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 26:1-7 

யோபு மறுமொழியாக:

திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?

நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?

யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?

ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.

அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

மேற்கூறபட்ட வசனங்களில் சூகியனான பில்தாத் சொல்லிய வார்தைகளுக்கு யோபு மறுமொழியாக கூறிய பதில் என்னவென்றால்; அவன் மறைமுகமாக பேசுகிறான் கர்த்தருடைய சர்வ வல்லமையினால் அவர் செய்த காரியங்களையும்;  மனுஷன் திடனில்லாதவனாய் இருந்த போது அவருடைய ஒத்தாசையினால் மனுஷனுடைய இருதயம் திடப்படுகிறது என்றும், பெலனற்ற கையாக இருந்த போது கர்த்தர் ஆதரவாய் இருந்தார் என்பதும், மனுஷன் ஞானமில்லாதவனாயிருந்த போது உசாவு துணையாயிருந்து, மெய்யான பொருளாகிய நித்திய ஜீவனை அடைந்து கொள்ள பாத்திரவான்களாகும்படி குறைவற அறிவித்ததையும் கூறி இவைகள் எல்லாம் தேவன் தம்முடைய குமாரனுடைய ஆவியை மனுஷனுக்குள் அனுப்பி இவைகள் எல்லாம் செய்ததையும், தேவனை பற்றி அறிகிற அறிவை அவருடைய ஆவியால் அறிய செய்ததையும் எடுத்து சொல்லி, பின்பு அவன் சொன்னது ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு என்றும், அவர் பாதாளம் திறந்து வைத்திருக்கிறதையும், நரகம் மூடப்படாமல் வைத்திருக்கிறார் என்றும், உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். பின்னும் அவர் தம்முடைய வல்லமையினால் செய்த காரியங்கள் அதிசயமானவைகளாக காணப்படுகிறது; அதனைக் குறித்து 

யோபு 26:8-14 

அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.

அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.

அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.

அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.

தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.

மேற்கூறிய வசனங்கள் எல்லாம் யோபு சொன்னதின் கருத்துக்கள் எல்லாம் கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும்  அவ்விதமான தத்தளிப்பும், அதன் போராட்டங்களும் இவைகள் வந்து நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டால் வானத்தை (உள்ளத்தை) அவர் ஆவியினால் அலங்கரிக்கிறார்; அங்கு கிறிஸ்து உருவாகிறார்.  ஆனால் அவர் கரம் செய்வது இரட்சிக்கப்படாமல் இருக்கிறவர்களை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்குகிறார். ஆதலால்

பிரியமானவர்களே, இவைகள் மட்டுமல்ல அவருடைய வல்லமையின் செயலை யாராலும் அறிந்துக் கொள்ள முடியாது. அவர் அவ்வளவு வல்லமையுள்ள தேவன், யாரும் அவருக்கு ஒப்பாக முடியாது என்பதனை உணர்ந்து, நாம் மிகவும் தாழ்மைப்பட்டு அவர் கரத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.