தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:106
உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் நீதி நியாய பாதைகளில் தவறாமல் நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமாக எவ்விதத்திலும் மறைவாகவோ, வெளிப்படையாகவோ நினைக்கவோ, பேசவோக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 13:1-4
இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
மேற்கூறபட்ட வசனங்களில் யோபு மீண்டும் சொல்வது இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறேன். நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்கு தாழ்ந்தவனல்ல. மேலும் அவன் சொல்வது; சர்வவல்லவரோடே தனக்கு பேசவேண்டும் என்றும் அவரோடே வழக்காட விரும்புகிறேன் என்றும் சொல்கிறான். மேலும் யோபு சொன்னது
யோபு 13:5-28
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
நீங்கள் என் நியாயத்தைக்கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?
நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற, வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.
வசனங்களில் அவன் சகோதரர்கள் தேவனுக்காக நியாயக்கேடு பேசுகிறார்கள் என்றும், தேவனுக்காக வழக்காடுகிறவர்கள் என்றும், முகதாட்சணியம் தேவனுக்காக செய்கிறவர்கள் என்றும், கர்த்தருக்காக அவர்கள் பேசினது, அவரை பரியாசம் பண்ணுகிறார்கள் என்றும், அவ்விதம் அந்தரங்கமாய் முகதாட்சண்யம் பண்ணினால் அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார், அவருடைய மகத்துவம் உங்களை திடுக்கிட பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களை பிடிக்கமாட்டாதோ? அல்லாமலும் அவன் சொன்னது உங்கள் பேரை நினைக்கபண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்கு சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக் குவியல்களுக்குச் சமானம் என்று சொல்கிறான்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை தியானிக்கும் போது யோபு சொன்ன வார்த்தைகள் எல்லாமே பரியாசத்தின் வார்த்தைகளாக இருக்கிறது. இவ்விதமான பரியாசகாரர்களாக நம் வாழ்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதனை நாம் உணர்ந்து கர்த்தருக்கு முன்பாக நாம் எப்போதும் எத்தருணமான சூழ்நிலைகள் வந்தாலும் நியாயத்தின் பாதைகளில் நடந்து. நேர்மையாக பேசுகிறவர்களாக இருக்க வேண்டும். இவ்விதமாக நியாயத்தின் பாதைகளில் கர்த்தர் நம்மை நடத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.