தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லூக்கா 22:31,32
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குள் முதலில் ஸ்திரபட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய வாயை தூய்மையாக காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 18:1-21
அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.
அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.
அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்.
அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்.
அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பௌத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.
அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.
அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.
மேற்கூறபட்ட வசனங்களில் யோபு கூறிய வார்த்தைகளை கேட்டுக்கொண்ட அவன் சிநேகிதனான சூகியனான பில்தாத் யோபுக்கு பிரதியுத்தரமாக சொல்வது நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும் என்று சொல்லி கூறிய வசனங்களில் யோபு மிருகங்களை போல அவன் தன்னை எண்ணிக்கொண்டு தீழ்ப்பானவர்களில் ஒருவனை போல் ஆகிவிடுகிறான் என்றும்; அவன் தன்னுடைய கோபத்தினால் தன்னையே பீறுகிறவனாய் பேசுகிறதினால் பூமி பாழாய் போகுமோ? கன்மலை தன்னிடத்தை விட்டு போகுமோ என்கிறான். பின்னும் பில்தாத் யோபுவிடம் துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்து போகும், அவன் அடுப்பின் நெருப்பு அவிந்து போம், அவன் கூடாரத்தின் வெளிச்சம் அந்தகாரபடும்; அவன் விளக்கு அவனோடே அணைந்து போம் என்று சொல்லி, இன்னும் அநேக வார்த்தைகளால் நோக பேசுகிறான். என்னவென்றால் அவன் பேசுகிறதை வாசிக்கும் போது தன்னில் குற்றம் ஒன்றும் இல்லை என்றும் யோபுவிடத்தில் அநேக குற்றங்கள் உண்டு என்றும் பேசுகிறான். இப்படி தான் அநேகம் பேர் தங்களை நீதிமான்களாக கருதிக்கொள்வார்கள்.
பிரியமானவர்களே, கர்த்தரின் வார்த்தையாவது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருக்கும். ஆதலால் கர்த்தர் தரும் வார்த்தைகளை முதலில் நம்மை சீர்திருத்தி ஸ்திரபட்ட பின்பு, சகோதரர்களை ஸ்திரபடுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அப்போது கர்த்தர் நம்மை அங்கீகரிப்பார். ஆகையால் முதலில் நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்து, பின்பு மற்றவர்களை இரட்சிக்கும்படி கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.