தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 98:4 

பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாக நாம் உத்தமமும், செம்மையுமாய் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,  மணவாட்டி சபையாகிய நாம் நமக்கு நெருக்கங்கள் வந்து வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது கர்த்தரிடத்தில் ஏன் இவ்விதம் சம்பவிக்கிறது என்று கேள்வி எழுப்பக் கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 8:1-10 

அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?

உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,

நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,

சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.

உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.

நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.

அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?

மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யோபு தன் கஷ்டங்களினால் கர்த்தரிடத்தில் பேசின பின்பு, அதனை கேட்டுக்கொண்டிருந்த அவன் சிநேகிதனில் ஒருவனாகிய சூகியனான பில்தாத் யோபுக்கு பிரதியுத்தரமாக அநேக காரியங்களை கூறுகிறதை நாம் இந்த பகுதியில் வாசிக்க முடிகிறது.  அதின் கருத்துகளை நாம் ஆராய்ந்தறியும் போது கர்த்தர் குற்றமில்லாமல் யாரையும் தண்டிக்கமாட்டார் என்பது நிச்சயமாக அறிந்துக் கொள்ள வேண்டும். அவன் சொல்வது பிள்ளைகள் கர்த்தருக்கு விரோதமாக  பாவம் செய்திருந்து கர்த்தர் அந்த பாதகத்தின் ஆக்கினைக்கு பிள்ளைகளை ஒப்புக்கொடுத்திருந்தாலும் யோபு உண்மையாக தேவனை தேடுகிறவனாயிருந்து சுத்தமும் செம்மையுமாய்  இருந்திருந்தீரேயானால் கர்த்தர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தை சாங்கோபங்கமாக்குவார்.  என்னவென்றால் துவக்கம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும், ஆகையால் நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்து பாரும் என்றும்,  முன்னோர்கள் உபதேசிக்கும் வார்த்தைகளை கேட்டால் அவர்கள் நியாயத்தை வெளிப்படுத்துவார்கள் என்றான்.  பின்னும் அவன் சொன்னது 

யோபு 8:11-19 

சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?

அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?

தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.

ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.

வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்.

அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.

அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.

இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கூறி விட்டு சொன்னது ஒருவன் கர்த்தரைவிட்டு விட்டால்  மற்ற பேர்களை கர்த்தர் இரட்சித்து எடுப்பார் என்றும் சொல்லி விட்டு; அவன் சொல்வது தேவன் உத்தமனை வெறுப்பதுமில்லை, பொல்லாதவர்களுக்கு கைக்கொடுக்கிறதுமில்லை, இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளை கெம்பீரத்தினாலும் நிரப்புவார், உம்மை பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்து போகும் என்றான்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட கர்த்தரின்  வார்த்தைகளை தியானிக்கும் போது பிள்ளைகள் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தால், நாம் கர்த்தரிடத்தில் உண்மையும், நேர்மையுமாய் நடக்கும் போது, கர்த்தர் பிள்ளைகளை ஆக்கனைக்குள்ளாக தீர்த்தாலும், ஒரு நாளில் நமக்கு நீதியை விளங்கபண்ணுவார்.அல்லாமலும் தொடக்கம் அற்பமாகயிருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும்.  மேலும் நாம் முன்னோர்கள் நமக்கு தரும் உபதேச வசனங்களை கேட்டு நடந்தால் கர்த்தர் நியாயத்தை விளங்கபண்ணுவார். மற்றும் நாம் உத்தமமாய் பொல்லாப்பு செய்யாமல்  நடந்தால் கர்த்தர் நம்மை நகைப்பினாலும், நம்முடைய உதடுகளை கெம்பீரத்தினாலும் நிரப்புவார். நம்முடைய வாழ்வில் துன்மார்க்கம் காணப்பட்டால் உள்ளான சரீரமாகிய கூடாரத்தை அழியபண்ணுவார்.  ஆதலால் செம்மையாய் நடக்கிறவர்களை கர்த்தர் நீதியின் வழியிலும், நியாயப்பாதைகளுக்குள்ளும் நடத்தி செல்கிறார். இப்படியாக கர்த்தர்நம்மை ஆசீர்வதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.