தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 84:12 

சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எந்த கஷ்டமான சூழ்நிலமையிலும் கர்த்தரை மட்டும் சார்ந்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் உத்தம இருதயத்தோடு இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம் 16:1-7 

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.

அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:

எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.

பெனாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.

இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.

அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.

மேற்கூறிய வசனங்களில் ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, யாரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடி ராமாவை கட்டினான்.  இதனை கண்ட யூதாவின் ராஜா தமஸ்குவில் வாசம் பண்ணுகிற சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்திடம் உதவி கேட்கிறான்.  எப்படியென்றால் கர்த்தருடைய ஆலயத்திலும், ராஜா அரண்மனையின் பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும், பொன்னும் எடுத்து அவனுக்கு அனுப்பி; பாஷா தன்னை விட்டு விலகிபோகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையை தள்ளிப்போடும் என்று பொனாதாத்திடம் சொல்ல சொல்லியனுப்பினான்.  ஆசா சொல்லியனுப்பினதற்கு பெனாதாத் தனக்கு உண்டாயிருந்த சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்.  ஆதலால் இஸ்ரவேலின் முக்கிய பட்டணங்களையெல்லாம் முறியடித்தார்கள்.  இதனால் பாஷா ராமாவை கட்டுகிறதை நிறுத்திவிட்டான்.  அப்போது யூதாவின் ராஜாவாகிய ஆசா, யூதா அனைத்தையும் கூட்டிக்கொண்டு ராமாவின் கற்களையும், அதன் மரங்களையும் எடுத்து வந்து கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான்.   ஆனால் ஆசா கர்த்தரை சார்ந்துக்கொள்ளாமல் சீரியாவின் ராஜாவை சார்ந்துக்கொண்டபடியினால் சீரியா ராஜாவின் இராணுவம் ஆசாவுக்கு தப்பிபோயிற்று  என்று கர்த்தர் ஞானதிருஷ்டிகாரனோடு சொல்கிறார்.  ஆகையால் அவன் சொல்லும் கர்த்தருடைய வார்த்தை 

11நாளாகமம் 16:8-14  

மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.

ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.

தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.

மேற்கூறிய  வசனங்கள் கேட்டவுடன் ஆசா ஞானதிருஷ்டிகாரன்மேல் சினந்து கோபமடைந்து அவனை காவலறையிலே வைத்தான்.  அதுவுமட்டுமல்லாமல் ஜனங்களில் சிலரை கொடூரமாய் துன்பப்படுத்தினான். இவன் அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமுமாயிருந்தது.  ஏனென்றால் அவன் தன் வியாதியிலும் கர்த்தரையல்ல பரிகாரிகளையே தேடினான்.  பின்பு வசனத்தில் எழுதியுள்ளபிரகாரம் நித்திரையடைந்து தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டி வைத்திருந்த அவனுடைய கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.  

பிரியமானவர்களே, ஆசாவை போல் நாம் கர்த்தருக்கு உத்தமமாய் இருந்து விட்டு, கஷ்டமான சூழ்நிலமைகள் வரும் போது அந்நியரோடு பற்றிக்கொண்டு, கர்த்தர் நமக்கு தந்த ஆசீர்வாதங்களை அந்நியருக்கு கொடுத்தால் கர்த்தர் அதில் பிரியமாயிருப்பதில்லை.  என்னவென்றால் பாஷாவை எதிர்க்கும்படி சீரியரோடு ஆசா தொடர்புக்கொள்கிறான். ஆனால் எந்த சூழ்நிலமையிலும் கர்த்தரை மட்டுமே பற்றிக்கொண்டால் கர்த்தர் எல்லாவிதத்திலும் நமக்கு உதவி செய்வார்.  மேலும் நம்முடைய பாவத்தினால் நோய்கள் வராமல் ஜாக்கிரதையோடு நடந்துக் கொள்ள வேண்டும்.  மற்றும் எல்லாநிலமையிலும் கர்த்தரை மட்டுமே தேடவேண்டும்.  அப்போது கர்த்தர் நமக்கு எல்லாவிதத்திலும் துணை செய்வார்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.