தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 62:5

வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா. 

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை என்றன்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை பட்டயத்தாலும் ஈட்டியினாலும் அல்ல, தேவனுடைய கிருபையால் மீட்கிறவர் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 45:1-17 

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.

உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு; ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.

ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.

சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.

உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

மேற்கூறபட்ட வசனங்கள் சோஷனீம் என்னும் வாத்தியத்திலே வாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகதலைவனுக்கு  ஒப்புவிக்கப்பட்ட நேசப்பாட்டாகிய சங்கீதம்.  இதன் பொருள் என்னவென்றால்   நம்மில் கிறிஸ்துவை தேவன் மணவாளனாகவும், பரிசுத்த ஆவியானவரை மணவாட்டியாக்கியும், அவர்கள் அலங்காரம் பரிசுத்த அலங்காரமுள்ளவர்களாகவும், நம்முடைய பாரம்பரிய உலகத்தின் பழக்கவழக்கங்கள் எல்லாம் நாம் விட்டு விடும் போது நம்முடைய உள்ளத்தில் வருகிற தேவ மகிமையை குறித்து; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது என்றும், மணவாளனாகிய கிறிஸ்துவினிடத்தில் தேவ வசனத்தால் மணவாட்டியானவர் வருகிறார் என்பதனையும் குறிக்கிறது.  அவ்விதமாக அவர் ராஜாவின் அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.  இப்படியாக நம்முடைய பிதாக்களுக்கு பதிலாக அவருடைய குமாரர் இருப்பார்கள்; அவர்களை பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர் (தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்).  அவ்விதமாக இருக்கும் போது கிறிஸ்து பிதாவினிடத்தில் சொல்கிறார் இந்த காரியங்கள் எல்லா தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன் என்றும்; இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றன்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள். இப்படியாக நாமும் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.