தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கொலோசெயர் 1:18
அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய தலைமை கிறிஸ்து.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை குறித்து கர்த்தர் அவருடைய வேலையில் விசாரிக்கிறவராயிருக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 27: 4-15
இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
மேற்கூப்பட்ட வசனங்களில் ஒவ்வொரு வகுப்பிலும் சேனாபதிகளும், தலைவராயிருந்தவர்களும், விசாரிக்கிறவ்களுமாகிய பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் இருபத்து நாலாயிரம் பேர்களுமாக பன்னிரண்டு மாதத்தின் செயல்களை குறித்து எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கோத்திரத்துக்கு தலைவர்கள் யாரென்றால்
1 நாளாகமம் 27:16-22
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.
செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.
கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.
தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.
இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்களை போல பெருக பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயது முதல் அதற்கு கீ்ழ்பட்டவர்களின் இலக்கத்தை தொகையேற்றவில்லை. செருயாவின் குமாரன் யோவாப் எண்ண துவக்கியும் முடிக்காதே போனான்; அதற்காக இஸ்ரவேலின் மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த தொகை தாவீது ராஜாவின் கணக்கிலே ஏறவில்லை. தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புக்காரர்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் என்பது
1 நாளாகமம் 27:25-31
ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,
நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலூப்பின் குமாரன் எஸ்ரியும்,
திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,
ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீது ராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
தாவீதின் சிறியதகப்பனாகிய யோனத்தான் என்னும், புத்தியும், படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்: அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான். அகிதோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனாகிய ஊசாயி ராஜாவின் தோழனாயிருந்தான். பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகிதோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைதலைவனாயிருந்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறிய கர்த்தரின் வசனங்களை நாம் தியானிக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றிலும் வல்லமையும் மகிமையும் உடையவராக விளங்குகிறார் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் விசாரிப்புக்காரரும், ஆலோசனைக்காரருமாயிருந்து எல்லாவற்றிக்கும் தலைமையாக விளங்குகிறார். மற்றும் யோவாபைக்கொண்டு தாவீது இஸ்ரவேலை எண்ணினது கர்த்தருக்கு முன்பாக அக்கிரமமாக வெளிப்பட்டது. ஆனால் இப்போது யோவாபோ இஸ்ரவேலை எண்ண துவக்கி முடிக்காமல் இருந்ததால் இஸ்ரவேல் மேல் தேவ கோபம் ஏற்பட்டது. ஆதலால் நம் எல்லா காரியங்களிலும் ஜாக்கிரதையாக இருந்து நம் உள்ளத்தின் எல்லா செயல்பாடுகளிலும் கிறிஸ்து தலையாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.