தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 27:18

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவாகிய வாசலின் காவலாகிய வசனங்களை காத்து கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய இரட்சிப்பினால் தேவ மகிமையடைதலின் விளக்கத்தை குறித்து தியானித்தோம்.  

அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 25:9-31 

முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

ஏழாவது எசரேலோ, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

எட்டாவது எஷாயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

ஒன்பதாவது மத்தனீயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பதினோராவது அசாரியேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பதினைந்தாவது எரேமோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

பத்தொன்பதாவது மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும் விழுந்தது.

மேற்கூறிய வசனங்களில் எழுதப்பட்டவர்கள் கர்ததருடைய ஊழியத்திற்கு என்று சீட்டுபோட்டவர்களில் சீட்டு விழுந்தவர்களின் பேர்வழிகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் 

1 நாளாகமம் 26:1- 5 

வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,

மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,

எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;

ஒபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் வாசல் காக்கிறவர்களின் வகுப்புகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.  வாசல் காக்கிறவர்கள் என்றால் வாசலாகிய கிறிஸ்துவின் வசனங்களை நம்முடைய வாழ்வில் ஏற்றுக்கொண்டு காத்துக்கொள்ளுகிறவர்களை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறார்.  ஆகையால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நானே ஆடுகளுக்கு வாசல் என்கிறார்; அவர் தான் புதிய எருசலேமாக நம்மில் மகிமையாக விளங்குகிறார்.  அல்லாமலும் எருசலேம் தேவாலயத்திற்கு பன்னிரண்டு வாசல்கள் இருந்ததாக கர்த்தர் திருஷ்டாந்தப்டுத்துகிறார்.  இந்த பன்னிரண்டு வாசல்களின் செயல்பாடுகள் கிறிஸ்துவின் மகிமையின் ஆலயமாக நாம் ஒவ்வொருவரும் விளங்கும் போது நம்மில் காணப்படவேண்டும். பன்னிரண்டு வாசல்களும் என்னவென்றால் ஆட்டு வாசல், மீன் வாசல், பழைய வாசல், பள்ளதாக்கின் வாசல், குப்பை மேட்டு வாசல், ஊருணி வாசல், தண்ணீர் வாசல், குதிரை வாசல், கிழக்கு வாசல், மல்கியா(மிப்காத்) வாசல், எப்பிராயீம் வாசல், காவல் வீட்டு வாசல்; இவ்விதமாக பன்னிண்டு நற்கிரியை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். இப்படியாக நற்கிரியைகள் செய்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்பதனை நாம் கருத்தில் கொண்டு நம்மை கர்த்தரின் வாசலை காக்கும் உள்ளங்களாக  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.