தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 35:27
என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் சுகத்தை விரு்புகிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவுக்குள்ளாக சத்தியத்தை விளம்ப வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 8:14-28
அகியோ, சாஷாக், எரேமோத்,
செபதியா, ஆராத், ஆதேர்,
மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
யாக்கிம், சிக்ரி, சப்தி,
எலியேனாய், சில்தாய், எலியேல்,
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
அப்தோன், சிக்ரி, ஆனான்,
அனனியா, ஏலாம், அந்தோதியா,
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர்.
சம்சேராய், செகரியா, அத்தாலியா,
யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.
இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
மேற்கூறபட்டவர்கள் பென்யமீன் புத்திரராயிருந்து, தங்கள் சந்ததிகளில் பிதாக்களின் தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள். கிபியோனிலே குடியிருந்தவன் கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின் பெயர் மாக்காள். அவன் வம்சத்தின் பெயர்கள்
1 நாளாகமம் 8:30-32
அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
இவர்கள் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமின் சமீபத்தில் குடியிருந்தார்கள். பின் நேர் கீஸைப் பெற்றான்; கீஸ் சவுலையும் அதிலிருந்து உள்ள வம்சங்கள்
1நாளாகமம் 8:40
ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பௌத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
மேற்கூறப்பட்டவர்கள் எல்லாரும் பராக்கிரமசாலிகளான வில்வீரராயிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பொளத்திரர்கள் இருந்தார்கள். அவர்கள் தொகை நூற்றைம்பது பேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவர்கள் பென்யமீனர்கள் கர்த்தரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், வில்வீரரர்களுமாயிருந்தார். ஆதலால் பென்யமீன் வம்சம் யுத்தத்திற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்களாயிருந்தார்கள். ஆகையால் கர்த்தருக்கு பிரியமாய் நடந்தால் மட்டுமே அவன் சுகமாய் கர்த்தருக்குள் வாழுவான். ஆதலால் கர்த்தருக்குள் சுகமாய் தங்கியிருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.