தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஆதியாகமம் 49:20

ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கலந்த துர் உபதேசம் இல்லாமல் கர்த்தரோடு வாழ்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் புது சிருஷ்டியாக இருக்கவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 7:30-40 

ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.

பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.

ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.

யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.

சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.

அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.

சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,

பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.

யெத்தேரின் குமாரர், எப்புன்னே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.

உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.

ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் ஆசேர் கோத்திரத்தின் வம்சங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது.  இவர்களில் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்ச தலைவரும், தெரிந்துக்கொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும்,பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்களில் யுத்தத்திற்கு போகதக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம் பேர்.  ஆசேர் கோத்திரத்தைக குறித்து 

உபாகமம் 33:24-27 

ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

மேற்கூறபட்ட  வசனங்களில், அவன் தன் சகோதரருக்கு பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். மேலும் அவன் முழுமையான சத்திய வசனத்தால் கட்டபடாதிருப்பான். எப்படியெனில் ஆசேரில் பாதரட்சையின் கீழ் இரும்பும், வெண்கலமும் இருக்கும் என்று திருஷ்டாந்தப்படுத்தியது எதற்காகவென்றால் முழுமையான பரிசுத்தம் இல்லை என்றும், துர் உபதேசம் கலந்திருக்கும் என்றும், உலகத்தின் ஆவி அவர்களுள்ளிலிருக்கும் என்றும், ஆனால் அவர்கள் நாட்களுக்கு தக்கதாய் பெலன் உண்டாயிருக்கும் என்கிறார்.  நாட்களுக்கு தக்கதாய் என்று சொல்லும் போது, நாள் என்பது கிறிஸ்து என்றும்; அவருடைய சத்திய வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறதற்கு தக்கதாய் கிறிஸ்துவின் பெலன் தரிக்க முடியும். ஆதலால் நாம் முந்தின பொல்லாத கிரியைகளை விட்டு, கர்த்தரின் சத்திய உபதேசம் ஏற்றுக்கொண்டால் 

உபாகமம் 33:26  

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.

ஆதலால் ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது. 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை தியானித்து அவருடைய சத்திய வசனங்களின் படி நடப்போம் என்று ஒப்புக்கொடுபபோம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.