தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 9: 6 

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய செயல்கள் வானத்திலிருந்து வந்த கர்த்தருக்குரியவைகளாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 1:1-34 

ஆதாம், சேத், ஏனோஸ்,

கேனான், மகலாலெயேல், யாரேத்,

ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

நோவா, சேம், காம், யாப்பேத்.

யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.

காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.

கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.

கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

மிஸ்ராயீம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,

அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

சேம், அர்பக்சாத், சாலா,

ஏபேர், பேலேகு, ரெகூ,

செரூகு, நாகோர், தேராகு,

ஆபிராமாகிய ஆபிரகாம்.

ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆபிரகாம் முதல் ஈசாக்கின் குமாரர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.  மேலும் 

1 நாளாகமம் 1:35-54 

ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.

ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.

சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.

லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.

சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.

ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.

ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.

பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.

ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.

ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,

அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,

மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

ஈசாக்கின் குமாரரான ஏசாவின் சந்ததியாராகிய ஏதோமின் பதினொன்று பிரபுக்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.  ஆனால் இஸ்ரவேலின் குமாரர்கள்  

1 நாளாகமம் 2:1,2 

இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.

இவைகள் இஸ்ரவேலின் புத்திரர்.  மேலும் 

1 நாளாகமம் 2:3 

யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.

இந்த வசனத்தில் எழுதபட்டவர்கள் கானான் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்கள்.  இவர்களில் ஏர் என்பவன் யூதாவின் மூத்த குமாரன்.  இவன் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாதவனானபடியால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார்.  அவன் மருமகளான தாமார் அவனுக்கு பாரேசையும், சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர். பாரேசின் குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.  சேராவின் குமாரர் எல்லாரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்து பேர்.  சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலை கலங்கபண்ணின ஆகான் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.  ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.  எஸ்ரோனுக்கு பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம் கெலுபா என்பவர்கள்.  ராம் அம்மினதாபை பெற்றான்.  அம்மினதாப் யூதபுத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.  நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.  போவாஸ் ஓபேதை பெற்றான்; ஓபேத் ஈசாயைப்பெற்றான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தருக்கு பொல்லாப்பானவைகளை செய்கிற ஆத்துமாவை அவர் கொல்லுகிறார் என்பதும், மற்றும் நம் உள்ளத்தின் ஜனனத்தில் மாம்ச சந்ததிக்கும், ஆவிக்குரிய சந்ததிக்கும் அடையாளங்கள் உண்டாகிறது என்பதும், யூத கோத்திரத்தில்  இயேசு பிறப்பதற்கான சகல கிரியைகளையும் கர்த்தர் செய்கிறார் என்பதும் விளக்கப்படுகிறது. இதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால், முதலில் நம்முடைய பாவத்தினால் ஆகிய பிறப்பு ஆதாம் என்பவன் முதலாம் மனிதனும், இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர் என்பதற்கு  பல செயல்பாடுகள் நம் உள்ளத்தில் நடந்து வரும் போது; யூதாவை கர்த்தர் அதிலிருந்து வேறுபடுத்தி கிறிஸ்து நம்மில் தோன்றுவதற்காக பல திட்டங்கள் போட்டு செயல்படுகிறார் என்பதும் புரிய வருகிறது.  ஆதலால் நம்முடைய வாழ்வில் நம் உள்ளத்தில் இயேசு பிறந்தால் மட்டுமே நமக்கு இரட்சிப்பு காரணமாகிறது.  ஆதலால் நாம் ஒவ்வொருவரும் பழைய மனுஷனாகிய ஆதாமை களைந்து போட்டு புதிய மனுஷனாகிய கிறிஸ்துவை தரித்துக்கொள்ள வேண்டும்.  இப்படியாக நாம் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.