தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 13:43

அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய பகைஞர்களை கர்த்தர் அழித்து, நாம் முழுமனதோடு கர்த்தரில் அன்புக்கூர்ந்து, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல் பிரகாசிப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கடைசி நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், உலகம், மாமிசம், பிசாசு இவற்றை ஜெயம் எடுத்து, கர்த்தரை புதிய பாடலால் பாடி கீர்த்தனம் பண்ணும் படியாக தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

நியாயாதிபதிகள் 5:6-31 

ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.

தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின.

நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள்.

தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுகவாசல்களிலே போய் இறங்குவார்கள்.

விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ.

மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.

அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.

இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.

மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி.

கீலேயாத் மனுஷர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்ததென்ன? ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தார்கள்.

செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.

ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளை கிடைக்கவில்லை.

வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின.

கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டுபோயிற்று; என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்.

அப்பொழுது குதிரைகளின் குளம்புகள், பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.

மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.

ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.

தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெறியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.

அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான்.

சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணிவழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய ரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய ரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள்.

அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள் அவளுக்கு உத்தரவு சொன்னதுமன்றி, அவள் தானும் தனக்கு மறுமொழியாக:

அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.

கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

ஆனால், பாராக், தெபொராள் என்பவர்கள் இஸ்ரவேலில் குறிப்பிடப்பட்டவர்கள்.  மேலும் தெபொராள் இஸரவேலில் தாயாக எழும்பும்படியாக நியமிக்கப்பட்டிருந்தாள்.  அவள் எழும்பும் வரையில் கிராமங்கள் பாழாய் கிடந்தன என்று எழுதப்பட்டிருக்கிறது.  அந்த கிராமங்கள் என்பது நம்முடைய உள்ளத்திற்கு திருஷ்டாந்தம் என்பதனை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.  அல்லாமலும் தெபொராள் என்பள் தீர்க்கதரிசியானவள்.  அவள் பேரீச்சை மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாள் என்று எழுதப்பட்டிருப்பது, மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவருக்கு திருஷ்டாந்தம்.  இவர் நம்முடைய உள்ளத்தில் இடம் பெறும் வரையிலும், கிராமங்கள் பாழாயிருக்கும்.  இதன் விளக்கங்கள் கிறிஸ்து உள்ளத்தில் எழும்பும் மட்டும், நாம் பலவித உலகத்தின் கிரியைகளில் மூழ்கி சிக்குண்டு, எந்த பரிசுத்த வாழ்வும் நம்மில் இல்லாதிருக்கும். ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுக்கும் போது, நம்முடைய ஆத்துமாவை அவர் இரட்சிக்கிறார். 

அவ்விதம் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவைக்குறித்து வெள்ளை கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே இதை பிரஸ்தாபியுங்கள்.  அப்படியாக கர்த்தரின் வார்த்தைகளை பிரஸ்தாபிக்கிறவர்கள், தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களின் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதி நியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்கு செய்த நீதி நியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்.  அதுமுதல் இரட்சிக்கப்பட்டவர்கள் கர்த்தரின் சபையில் சேர்க்கப்படுவார்கள்.  அவ்விதம் இரட்சிக்கப்பட்டு சேர்க்கப்படுகிறவர்களுடைய ஆத்துமா விழித்தெழும்பும்.  அப்படி விழித்தெழும்புகிற ஆத்துமா, விழித்தெழும்பும் போது, நீதி, நியாயங்களோடு இருக்கிற ஆத்துமா, தீர்க்கதரிசனங்களோடு கூட எழும்புகிறது.  

இவை பாவத்திற்கு மரித்து, நீதிக்கு பிழைக்கிற ஆத்துமாவில் கிறிஸ்து தீர்க்கத்தரிசியாக எழும்புகிறார் என்பதன் திருஷ்டாந்தம் தான் தெபொராள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்பதும், அவரோடுக்கூட வலதுபாரிசத்தில் இரட்சிக்ப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் வீற்றிருப்பார்கள் என்பதும், பூமியிலிருக்கிறவர்கள் அவர்களுக்கு முன்பாக நியாய விசாரணையில் நிற்பார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.  

மேலும் கர்த்தர் சிறைப்பட்டவர்களை சிறையாக்கிக்கொண்டு போகிறார் என்பதனை குறித்து 

எபேசியர் 4:7-10 

கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

மேலும் கர்த்தராகிய கிறிஸதுவுக்கு எல்லா ஆளுகையையும் தேவன் கொடுத்திருக்கிறார் என்பது நியாயாதிபதிகள் 5:14-31  மேற்க்கூறிய வசனங்கள் கர்த்தர் ,நம்மை பகைக்கிற சத்துருக்களை அழித்து நிர்மூலமாக்கும் படியாக நமக்காக பரிசுத்தவான்களுமாக  நின்று யுத்தம் செய்கிறார்.  அவ்விதம் யுத்தத்தை மேற்க்கொண்டு வரும் போது நம்முடைய ஆத்துமா கர்த்தரை மகிமைபடுத்தும்படி பாடி துதிக்கிறார்கள். அந்த துதியானது, கர்த்தாவே உம்மை பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்;  அவரில் அன்புகூருகிறவர்களே, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருக்கக் கடவர்கள் என்று பாடினார்கள்.  அந்த பாடல் சத்தமானது நம்முடைய ஆத்துமா அமைதியைக்கண்டடைகிறது.  

இவ்விதமாக நாமும் கர்த்தரால் மீட்பைப்பெற்று பாடி கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.  ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.