தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 73: 1

சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எல்லாரும் உண்மையான இஸ்ரவேலராக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா துர் உபதேசத்தால் நிறையப்படாதபடி பாதுகாத்துகெள்ளவேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 4:1-10  

ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.

ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.

அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.

அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,

நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.

அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.

அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம்பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் கேராவின் மகன் ஏகூத், இஸ்ரவேலரை மோவாபிடத்திலிருந்து விடுவித்து இரட்சித்த பிறகு, ஏகூத் மரணமடைகிறான்.  அவன் மரணமடைந்த பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானனதை செய்ததால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையில் விற்றுப்போடுகிறதை வாசிக்கிறோம். ஆனால் அவனுடைய சேனாபதி சிசெரா; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான். அவனுக்கு தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேலை இருபது வருஷம் ஒடுக்கினான்; 

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிடும்போது லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.  அவள் எப்பீராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்ச மரத்தின் கீழே குடியிருந்தாள்;  அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்கு போவார்கள்.  அவள் நப்தலியிலுள்ள கேதேசியிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து, சொன்னது நப்தலி புத்திரரி்லும், செபுலோன் புத்திரரிலும்  பதினாயிரம் பேரை கூட்டிக்கொண்டு;  தாபோர் மலைக்கு போகக்கடவாய் என்றும், கர்த்தர் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும்,  அவன் கையில் ஒப்புக்கொடுக்கிற விதத்தை கட்டளையிட்டதையும் கூறுகிறாள்.  

அப்போது பாராக் தீர்க்கதரிசியானவளிடத்தில், நீ என்னோடேக்கூட வந்தால் போவேன்; இல்லையென்றால் போக மாட்டேன் என்கிறாள்.  அதற்கு அவள் நான் நிச்சயமாய் உன்னோடே கூட நிச்சயமாய்  வருவேன்;  ஆனாலும் நீ போகிற பிரயாணத்தின் உனக்கு கிடைக்கிற மேன்மை உனக்கு கிடையாது;  கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி  அவள் எழும்பி பாராக்கோடே போனாள்.  ஆனால் பாராக் 

நியாயாதிபதிகள் 4:11-24  

கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

அபினோகாமின் குமாரன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,

சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.

பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

அவன் அவளைப் பார்த்து: குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.

இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன்மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.

மேற்க்கூறிய வசனங்களை நாம் வாசிக்கும் போது பாராக் கர்த்தர் சொன்னது போல் பாராக் தாபோர் மலைக்கு பதினாயிரங்களுமாக போனான்.  ஆனால்  ஏபேர் கேனியரை விட்டு பிரிந்து சானாயீம் என்னும் கர்வாலி மரத்தண்டையில் கூடாரம் போட்டிருந்தான்.  பாராக் மலையில் ஏறி போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்ட போது,அவன் எல்லா ரதங்களையும், எல்லா ஜனங்களையும், புற ஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலுருந்து கீசோன் பள்ளதாக்கிலே வரவழைத்தான்.  

ஆனால் தெபோரா பாராக்கிடம் கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுத்தார் அவர் உனக்கு முன்பாக புறப்பட்டார் என்று சொல்ல பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம் பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.  கர்த்தர் சிசெராவையும் அவனுடைய எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்.  சிசெரா கால்நடையாய் ஓடிப்போனான்.  பாராக் ரதங்களையும், சேனைகளையும், புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்.  சிசெராவின் சேனையெல்லாம் பட்டக் கருக்கினால் விழுந்தது ஒருவரும் மீதியாயிருக்கவில்லை.   

சிசெரா கால்நடையாய் ஏபேருடைய மனைவி யாபேலுடைய கூடாரத்திற்கு ஓடிப்போனான்.ஆத்சோரின் ராஜாவுக்கும், யாகேலுடைய வீட்டிற்கும் சமாதானம் உண்டாயிருந்தது.  யாகேல் வீட்டிற்கு வெளிய போய் சிசெராவை உள்ள வாரும் என்று அழைத்து ஆண்டவனே, பயப்படாதேயும் என்று சொல்லி ஒரு சமுக்காளத்தினாள் மூடினாள்.  ஆனால் அவன் சொல்கிறான் யாகேலிடம் வீட்டின் வாசலில் வந்து யாராவது உண்டா என்று கேட்க, இல்லை என்று சொல்லவும், மற்றும் சிசெரா குடிக்க தண்ணீர்  தா என்று கேட்க பாலை குடிக்க கொடுத்தாள்.  ஆனால் இரண்டாவதும் திரும்ப சமுக்காளத்தினாள் மூடினாள்.  

பின்பு அவள் செய்தது 

நியாயாதிபதிகள் 4: 23-24  

இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.

இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன்மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் கானானிய ராஜாவாகிய யாபீனை, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக தாழ்த்தினார். இஸ்ரவேல் புத்திரரின் கை கானானிய ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் பலத்துக்கொண்டே இருந்தது.  

பிரியமானவர்களே , இதுவரையிலும் நாம் தியானித்த கருத்துக்கள் என்னவெனில் நம் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர், தீர்க்கதரிசியாக வெளிப்படுகிறார் என்றும், அவருடைய உதவியினால் கிறிஸ்து நம் உள்ளத்தில் இருக்கிற கானானிய ராஜாவின் சேனாபதியை முதலில் அழித்தாலே, கானானிய ராஜவை நம் உள்ளத்திலிருந்து நிர்மூலமாக்கமுடியும் என்று, அவர் இஸ்ரவேலரின் கையை கானானுக்கு எதிரே பலக்க செய்து கொண்டிருப்பதையும், நம் உள்ளத்தில் பொல்லாத கூட்டத்தாரை கிறிஸ்துவின் வசனத்தாலும், அவருடைய ஆவியினாலும் உள்ளறையில் வைத்து  வசனமாகிய பட்டயத்தினால் எவ்விதம் அழிக்கிறார் என்பதையும், மற்றும் எல்லா புற ஜாதிகளின் கிரியை அழிக்கிற விதத்தையும், கர்த்தர் நமக்கு தெளிவாக திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்பது நமக்கு தெரிகிறது.  மேலும் இந்த எல்லா செயல்களுடைய மேன்மை, நமக்குரியதல்ல, கர்த்தருக்குரியது.  

ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தர் நமக்குள்ளில் இருக்கிற கானானியரை அழித்து, நம்மை சுத்த இஸ்ரவேலராக மாற்றுகிறார். ஏனென்றால் 

ரோமர் 9:4-7

அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.

அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.

எல்லாரும் இஸ்ரவேலரல்லாததால் நாம் எல்லாரும் இதுபிரகாரம் சுத்த இருதயமுள்ள இஸ்ரவேலராக மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.