தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 26 : 11,12 

நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.

 என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் தொடக்க முதல் பூரணமாகுதல் வரையிலும் வரும் மாற்றங்கள் - திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் விட்டுவிட்ட துர்கிரியைகளை மீண்டும் பின் பற்றி நம்முடைய ஆத்துமா அழிந்து போகாமல் காத்துக்கொள்ளும்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து கர்த்தர் நம்மோடு கூறுகிற வசனத்தை நாம் தியானித்தோம்.  

அதுவுமட்டுமல்லாமல் அடுத்தபடியாக நாம் தியானிப்பதன் கருத்து 

யோசுவா 24: 1 – 14

பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.

அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.

நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.

ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.

நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன், அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.

நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர் இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும் பின்தொடர்ந்தார்கள்.

அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.

அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு அப்புறத்திலே குடியிருந்த எமோரியரின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன்.

அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.

பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன்.

பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.

அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும் ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.

ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தருடைய வார்த்தை, யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடி வரசெய்து, இஸ்ரவேலின் மூப்பரையும்,தலைவரையும், நியாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்.  அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.    அப்போது யோசுவா ஜனங்களை நோக்கி: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும்,  நாகோருக்கும் தகப்பனாகிய தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருக்கும் போது, அவர்கள் வேறே தேவர்களை சேவிக்கும் போது கர்த்தர் ஆபிரகாமை அழைத்துக்கொண்டு வந்து அவனை கானான் தேசமெங்கும் சஞ்சரிக்க வைத்ததையும், அவன் சந்ததியை திரட்சியாக்கி ஈசாக்கை கொடுத்ததையும், ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கட்டளையிட்டு ஏசாவுக்கு சேயீர் மலை தேசத்தை சுதந்தரிக்கும் படி கொடுத்தார் என்பதையும் கூறி, ஆனால் யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்திற்கு போனார்கள் என்கிறான்.  

பின்பு நடந்த காரியம் கர்த்தர் சொல்வது  என்னவென்றால் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி, எகிப்தயரை வாதைகளால் வாதித்து, இஸ்ரவேலையோ, அவர்கள் நடுவிலிருந்து புறப்படபண்ணி சமுத்திரகரை வழியாக கொண்டு வரும் போது, இஸ்ரவேலரை எகிப்தியர் பின் தொடர்ந்ததால், சமுத்திர கரையை புரளப்பண்ணி, எகிப்தியரை சமுத்திரம் மூடிபோட்டு என்பதை உங்கள் கண்கள் கண்ட பின்பு அநேக நாட்கள் சஞ்சரித்தார்கள் என்கிறார். அதன் இன்பு யோர்தானுக்கு அப்புறத்திலிருக்கும் எமோரியர் குடியிருந்த தேசத்திற்கு கொண்டு வந்து, அங்கு அவர்களோடு யுத்தம் பண்ணும் போது அவர்களை இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் தேசத்தை கட்டிக் கொண்டதால் அவர்களை இஸ்ரவேலர் முகத்தினின்று அழித்து விட்டார் என்றும் அப்போது இதனை அறிந்த சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்பவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை இஸ்ரவேலை சபிக்கும்படி அழைத்தனுப்பும் போது கர்த்தர் பிலேயாமுக்கு செவிக்கொடுக்க சித்தமில்லாததினாலே இஸ்ரவேலை அவன் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான் இவ்விதம் உங்களை அவன் கையில் தப்புவித்தேன் என்கிறார்.

பின்பு யோர்தானை கடந்து எரிகோவுக்கு கொண்டு வந்து அங்குள்ள எல்லா ஜாதிகளையும் இஸ்ரவேலுடைய கையில் ஒப்புக்கொடுத்தார். என்றும் அப்போது இதனை அறிந்த சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்பவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை இஸ்ரவேலை சபிக்கும்படி அழைத்தனுப்பும் போது கர்த்தர் பிலேயாமுக்கு செவிக்கொடுக்க சித்தமில்லாததினாலே இஸ்ரவேலை அவன் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான். இவ்விதம் உங்களை அவன் கையில் தப்புவித்தேன் என்கிறார்.பின்பு யோர்தானை கடந்து எரிகோவுக்கு கொண்டு வந்து அங்குள்ள எல்லா ஜாதிகளையும் இஸ்ரவேலுடைய கையில் ஒப்புக்கொடுத்தார். 

மேலும் எமோரியரின் இரண்டு ராஜாக்களையும், உங்கள் பட்டயங்களாலும், வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை.  ஆனால் அவர்கள் முன்பாக குளவிகளை அனுப்பி துரத்தி விடுகிறார்.  அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள். நீங்கள் நடாத திராட்சத் தோட்டங்களின் பலனையும் ஒலிவ தோப்புகளில் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.  

பிரியமானவர்களே, முந்தின பகுதிகளை  நாம் கருத்தில்  கொள்ளும் போது, நம்முடைய ஆதி முதல் நம்முடைய கிரியைகளை கர்த்தர் ஒவ்வொன்றாக மாற்றி, நம்மை சுத்தபடுத்தி, சீர்படுத்தி, நமக்கு விரோதமாக எழும்புகிற சத்துருக்களை கர்த்தர் துரத்துகிற விதத்தையும், அதன்பின்பு, நம்முடைய ஆத்துமா, கிறிஸ்துவாகிய பட்டணமாகவும், அது நம்முடைய குடியிருப்பாகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகிய தோட்டமாகவும், தேவனின் தோட்டமாகவும் கர்த்தர் அவருடைய பலனாகிய ஆகாரத்தையும் நமக்கு புசிக்க தருகிறார்.  

ஆதலால் நாம் கர்த்தருக்கு பயந்து அவரை உத்தமும், உண்மையாய் சேவித்து, எல்லா எகிப்தின் தேவர்களை அகற்றி விட்டு, கர்த்தரையே சேவிப்போம்.  இவ்விதமாக நாம் நம்மை ஒப்புகொடுத்து ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.