தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 59: 16
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தின் துர்கிரியைகளாகிய புறஜாதிகளின் கிரியையை அதிகாலையில் கரத்தருடைய வார்த்தையாகிய அக்கினியால் சுட்டெரிப்பது திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் செய்யும் விசுவாச யாத்திரையில் கர்த்தரின் சித்தம்செய்கிறவர்கள் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிக்க போகிறது என்னவென்றால்
யோசுவா 8: 4- 17
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின் பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள்.
நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
அப்பொழுது அவர்கள்: முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம்.
அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான்.
அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.
பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம்பண்ணினபின்பு, யோசுவா அன்று ராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான்.
ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.
யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள்.
ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் யோசுவாவிடம் ஆயியின் ராஜாவையும், பட்டணத்தையும், நாட்டையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்று சொல்லி, எரிகோவுக்கும், அதின் ராஜாவுக்கும் செய்தது போல, ஆயியிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ய கடவாய். ஆனால் அதில் கொள்ளையிட்ட பொருட்களையும, மிருக ஜீவன்களையும் உங்களுக்கு கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம். பட்டணத்துக்கு பின்னாலே பதிவிடையை வை என்றார். அப்போது யோசுவா ஆயியின் மேல் போக யோசுவாவும் சகல யுத்த ஜனங்களும் புறப்பட்டார்கள். யோசுவா யுத்த வீரரான முப்பதினாயிரம் பேரை தெரிந்துக்கொண்டு, இராத்திரியிலே அவர்களை அனுப்பி பட்டணத்துக்கு பின்னாலே பதிவிருக்க வேண்டுமென்றும், ஆனால் வெகு தூரமாய் போகாமல் எல்லாரும் ஆயத்தமாயிருங்கள், நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டி வருகையில் ஆயி மனுஷர் முன் போல எங்களுக்கு எதிராக வருவார்கள்.
அப்போது நாங்கள் அவர்கள் முன்னாக ஓடி போவோம். அப்போது அவர்கள் முன் போல நமக்கு முன்பாக முறிந்து ஓடி போகிறார்கள் என்று சொல்லி, எங்களை துரத்தப் புறப்படுவார்கள். ஆனால் நாங்களோ பட்டணத்தை விட்டு அவர்களை இப்பாலே வரபண்ணும் மட்டும் அவர்களுக்கு முன்னாலே ஓடுவோம். அப்போது நீங்கள் எழும்பி வந்து பட்டணத்தை பிடிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார். நீங்கள் அதனை பிடித்து தீக்கொளுத்தி போடுங்கள்; கர்த்தரின் சொற்படி செய்யுங்கள் என்று அவர்களுக்கு கட்டளையிட்டு அனுப்பினான்.
அவர்கள் போய் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காக பதிவிருந்தார்கள். யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான். அதிகாலமே யோசுவா எழுந்திருந்து ஜனங்களை இலக்கம் பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடேகூட ஜனங்களுக்கு முன்னாக நடந்து ஆயியின்மேல் போனான். அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து; ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்.
அவர்களுக்கும், ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளதாக்கு இருந்தது. யோசுவா ஏறக்குறைய ஐயாயிரம் பேரை தெரிந்தெடுத்து அவர்களை பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையிலே பதிவிடையாக வைத்தான். யோசுவா எல்லாவற்றையும் திட்டம் பண்ணினபின்பு அன்று ராத்திரியிலே பள்ளதாக்கிலே போயிருந்தான். ஆயியின் ராஜா அதனை கேட்டபோது அவனும், அவனுடைய யுத்த ஜனங்களோடே கூட அதிகாலையிலே குறித்த நேரத்திலே இஸ்ரவேல் சபைக்கு எதிராக யுத்தம் பண்ண வந்தான். ஆனால் பட்டணத்திற்கு பின்னாக இஸ்ரவேலர் பதிவிடை வைத்ததை அறியாதிருந்தான். யோசுவா தன் யுத்த மனுஷரோடே சொல்லி வைத்தது போல் முன்பாக முறிந்தோடி போனது போல் செய்தபோது இஸ்ரவேலரை துரத்திக்கொண்டு வந்தார்கள்.
ஆனால் யோசுவா 8:18-23
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.
அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த் திரும்பினார்கள்.
பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
மேற்க்கூறிய வசனபிரகாரம் ஆயியை முறிய அடித்து அந்த பட்டணத்தை தீக்கொளுத்தினார்கள். ஆயியின் ராஜாவை முறிய அடித்தார்கள். இவ்விதமாக கர்த்தர் யோசுவாவை வைத்து ஆயிப்பட்டணத்தை பிடித்து அதனை தீவிரத்தோடே தீக்கொழுத்தினார்கள். அதனை ஆயியின் மனுஷர் பின்னிட்டு பார்த்து ஆகாசத்தில் புகை எழும்புகிறதையும் கண்டார்கள்.
இந்த காரியம் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நம்மில் ஆகாத புற ஜாதிகளின் கிரியைகளை அவர் வசனத்தால் ஆராய்ந்து அறிந்து, அதனை வார்த்தையாகிய அக்கினியால் சுட்டெரித்து, நம்முடைய உள்ளத்தில் இருந்த துர்கிரியையை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு வெளிப்படுத்தி, அதனை நம்மளிலிருந்து இல்லாதபடி மாற்றுகிறார். அப்போது நாம் சுத்தமாகுவோம். இதற்காக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.