தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 21:21

பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகுதலின் திருஷ்டாந்தம் யோர்தானில் எடுக்கப்பட்ட பன்னிரண்டு கற்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சொந்தபிள்ளைகள் ஆக வேண்டுமானால் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  அதற்காக திருஷ்டாந்தப்படுத்தவே கர்த்தர் யோசுவாவை வைத்து யோர்தான் ஆற்றை கடக்கப்பண்ணினார்.  

அல்லாமலும் அடுத்தபடியாகவ 

யோசுவா 4:1- 24 

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,

இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.

அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,

அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.

நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,

நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.

ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.

அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.

யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.

அவர்கள் யோர்தானில் எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,

இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது,

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.

பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,

உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

மேற்க்கூறப்பட்ட வசனபிரகாரம் ஜனங்கள் யோர்தானை கடந்து தீர்ந்த பின்பு, கர்த்தர் யோசுவாவை,நோக்கி பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரங்களில் ஒவ்வொருவரை தெரிந்துக்கொண்டு யோர்தானின் நடுவே ஆசாரியர்கள் கால்கள் நின்ற இடத்தில்  பன்னிரண்டு கற்களை எடுத்து அவைகளை அவர்களோடுக்கூட அக்கரைக்குக்கொண்டு போய்  இராதங்கும் ஸ்தானத்தில் வையுங்கள் என்று கட்டளையிடுங்கள் என்றார் 

அவ்விதமாக யோசுவா அவர்களை அழைத்து  நீங்கள் யோர்தானில் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக கடந்து போய் உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும் படி இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு தக்கதாய் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லை எடுத்து, நாளை இந்த கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களை கேட்டால், கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக யோர்தான் தண்ணீர் பிரிந்து போனதினால், அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது.  யோர்தானை கடந்து போகிற போது அவைகள் பிரிந்து போனதினால் இவைகள்  என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.  

யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் புத்திரர் செய்து ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்தில் யொசுவா இந்த கற்களை நாட்டினான்.  அவைகள் இந்நாள் வரைக்கும் அங்கே இருக்கிறது என்று வாசிக்கிறோம்.  மேலும் மோசே யோசுவாவுக்கு கட்டளையிட்டபடியெல்லாம்  ஜனங்களுக்கு சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடியுமட்டும் ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நிற்கும் போது ஜனங்கள் கடத்து போனார்கள்.  ஜனங்கள் கடந்து போனபின்பு  கர்த்தருடைய பெட்டியும் கடந்தது.  ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாக போனார்கள். 

ஆனால் ரூபன் புத்திரரும், காத் புத்திரரும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரும், மோசே தங்களுக்கு சொல்லியிருந்தபடியே அணிஅணியாய், இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக போனார்கள்.  ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் யுத்தசன்னதராய், யுத்தம்பண்ணும்படி கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளியில் கடந்து போனார்கள்.  அவ்விதமாக யோசுவாவை கர்த்தர் இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக மேன்மைபடுத்தினார்.  அவர்கள் மோசேக்கு பயந்திருந்தது போல யோசுவா உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுக்கு பயந்திருத்தார்கள்.  

பின்பு கர்த்தர் யோசுவாவிடம் சாட்சிப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர் கரையேறும்படி கட்டளையிட சொன்னது போல யோசுவா கட்டளையிட்டான்.  அப்போது உடன்படிக்கை பெட்டியை சுமக்கிறவர்கள் கரையேறி அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றின போது யோர்தானின் தண்ணீர்கள் தன்னிடத்திற்கு திரும்பி முன் போல அதின் கரை எங்கும் புரண்டது, இவ்விதமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி எரிகோவுக்கு கீழெல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.  

பின்பு அந்த பன்னிரண்டு கற்களை யோசுவா கில்காலிலே நாட்டி, இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நாளை உங்கள் பிள்ளைகள் இந்த கற்கள் ஏதென்று கேட்டால், உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்க வேண்டியது என்னவென்றால், இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் யோர்தானை கடந்து வந்தார்கள்.  பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய நாமம் பலத்ததென்று அறியும்படிக்கு, நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பயந்திருக்கும் படிக்கும், உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தை கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிபோக பண்ணினது போல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்க கடவீர்கள் என்றார்.  

பிரியமானவர்களே, நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமக்கு பலமான போராட்டங்கள் வரும் என்பதும், ஆசாரியராகிய கிறிஸ்துவின் துணையோடுகூட நாம் போராட்டத்தை வெற்றிப்பெற்று அக்கரை சேர்வோம் என்பதும், அந்த மிகுந்த போராட்டத்தில் அந்த பன்னிரண்டு கற்கள் கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தினது, நாம் கர்த்தரை விசுவாசித்து, ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இறங்கி, நம்மை பரிசுத்த மணவாட்டி சபையாக்குகிறார் என்பதும், அதனை தான் பன்னிரண்டு கற்களால் அலங்கரிக்கப்பட்ட  புதிய எருசலேம்.  

இவைகளை நம்முடைய உள்ளத்தின் அலங்காரம், அப்போது நம்முடைய எகிப்தின் வாழ்க்கையால் வந்த நிந்தையை கர்த்தர் மாற்றுகிறார்.  இவைகள் நம்முடைய பின் சந்ததிக்கும் நாம் வழிகாட்ட வேண்டும் என்பது தான் தேவனுடைய கட்டளையாக இருக்கிறது.  இவ்விதமான வாழ்க்கையை கிறிஸ்து மூலம் சுநந்தரிக்கும் படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.