தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 யோவான் 1: 9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து தேவனுடைய வாசஸ்தலமாக மாற வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் சகோதரரை பகைத்தால் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். அல்லாமலும் ஆத்துமா கொலைசெய்யப்படுகிறதை குறித்தும் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 35:22-34  

ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப்பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும்,

அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்றுபோடத்தக்க ஒரு கல்லினால் அவனைக்காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால்,

அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,

கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,

பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.

கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.

இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது.

எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.

சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.

தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக்கூடாது.

நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது ஒருவன் எந்த பகையும் இல்லாமல் ஒருவனை சடுதியில் விழபண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன் மேல் பட எறிந்ததினாலாயினும், அவன் செத்து போனால், கொலை செய்தவனையும், பழி வாங்குகிறவனையும், சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,  கொலைசெய்தவனை பழிவாங்குகிறவன் கையிலிருந்து தப்புவித்து, அவனை அடைக்கல பட்டணத்துக்கு திரும்ப போக கடவர்கள்.  

என்னவென்றால் அந்த மனிதன் மனப்பூர்வமாக அதனை செய்யாமல் தற்செயலாய் நடந்ததினால் அவனை பழிவாங்குகிறவன் கையிலிருந்து தப்புவித்துக்கொள்ளும்படியாக அவனை அடைக்கலப்பட்டணமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அவன் ஒப்புரவாகி அவரோடு மரித்து, பின் அவருடைய ஜீவனைப்பெற்று, அவர் ஆவியில் உயிர்தெழும்பும் போது அவன் பழிவாங்குகிறவன் கையிலிருந்து தப்புவிக்கப்படுவான்.  மற்றும் கர்த்தரிடத்தில் வந்தடைவதற்கு ஏதுவாகும்.  

ஆனால் அவன் அடைக்கலபட்டணத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டு பழிவாங்குகிறவன் அவனை கொலை செய்தால் அவனுக்கு இரத்தபழி இல்லை என்பதும், ஆனால் கொலைசெய்தவன்  அடைக்கப்பட்டணத்தில் இருக்க வேண்டும்.  ஆனால் நம்முடைய பிரதான ஆசாரியனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் அவன் தான் செய்த பாவத்திற்கு தக்கதாக அவரோடு மரித்து, பின் அவருடைய ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, தன் சுதந்தரமான காணியாட்சிக்கு திரும்பி போகலாம் என்கிறார்.  

இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் எந்த பாவியாயினும் நோக்கிப்பார் இரட்சிப்பேன் என்கிறார்.  இவ்விதமாக இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறை தோறும் உங்களுக்கு நியாயவிதி பிரமாணமாய் இருக்கிறது என்கிறார். அல்லாமலும் குற்றம் ஒருவன் செய்வானாகில் அவனுக்கு கர்த்தரிடத்திலிருந்து தீர்ப்பு உண்டு.  அதனால் அந்த தீர்ப்பில் அவன் அழிந்து போகாதபடி அடைக்கலத்திற்காக கிறிஸ்துவின் சிறகின் மறைவில் வந்தடையவேண்டும்.  அவன் கர்த்தரிடத்தில் தன் குற்றங்களை அறிக்கை செய்து இரட்சிக்கபடும் வரையில் அவனுடைய ஜீவனுக்காக மீட்கும் பொருளை யாரும் வாங்கக்கூடாது.  இவ்விதமான குற்றம் செய்தால் கர்த்தரின் வாசஸ்தலம் தீட்டுபட்டு விடும்.  அதனால் யாரும் தேசத்தை தீட்டுப்படுத்தக்கூடாது.  கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன். 

ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தர் நம்மிடத்தில் வாசம்பண்ணும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.