தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 10: 30

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் யாரையும் பழிவாங்கக் கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் நாமத்தை அறிவிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்றும், மேலும் நம்முடைய கோத்திர பிதாக்கள் தங்களுக்குள்ள சுதந்தர வீதத்தை சுதந்தரித்ததை குறித்தும் தியானித்தோம்.  

ஆனால் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

எண்ணாகமம் 35:1- 14  

எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்.

அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.

நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்தொடங்கி, வெளியிலே சுற்றிலும் ஆயிரமுழ தூரத்துக்கு எட்டவேண்டும்.

பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறந்தொடங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், மேற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடக்கடவீர்கள்; இது அவர்கள் பட்டணங்களுக்கு வெளிநிலங்களாயிருப்பதாக.

நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலைசெய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கக்கடவீர்கள்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் பிரவேசிக்கும்போது,

கைப்பிசகாய் ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள்.

கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது.

நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும்.

யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது எரிகோவின் அருகே யோர்தானை சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே வைத்து கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்கு குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடு; அந்தபடி பட்டணங்களை சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும்  கொடுக்க வேண்டும்.  ஏனென்றால் அந்த பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளை சூழ்ந்த வெளி நிலங்கள்  அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்பட வேண்டும்.  

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்தில் லேவியருக்கு கொடுக்கும் படி கட்டளையிடுவது என்னவென்றால் லேவிக்கோத்திரருக்கு நிலத்தின் பங்கிலோ, எந்த பங்கும் சீட்டு போட்டு பிரித்தெடுத்ததில் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் கர்த்தரே அவர்கள் சுதந்தரம் என்று கர்த்தர் சொன்னதினால், அவர்களுக்கு ஆசாரியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆதலால் கர்த்தர் அவர்களை எல்லாவிதத்திலும் இஸ்ரவேல் புத்திரரால் போஷிக்கிறார்.

ஆனால் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களின் வெளிநிலங்களின் அளவும், அடைக்கலத்திற்க்காக ஆறு பட்டணங்களும், இவ்விதம் அவர்களுக்கு நாற்ப்பத்தெட்டு பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களுமே கொடுக்க வேண்டும் என்பது கர்த்தருடைய கட்டளை ஆகும். அல்லாமலும் கர்த்தர் சொல்வது இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து பிரித்தெடுக்கும்போது  அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்தெடுத்து அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே கொடுக்க வேண்டும்.  

மேலும் அடைக்கலப்பட்டணமாக எதற்கு கொடுக்கப்படுகிறதென்றால் கைபிசகாய் ஒருவனைக் கொன்றுப்போட்டவன் ஓடிபோயிருக்கத்தக்கதாக அடைக்கலபட்டணங்களை குறிக்கக்கடவீர்கள் என்றும், கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கும் முன் சாகாமல் பழிவாங்குகிறவன் கைக்கு தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் அடைக்கலபட்டணமாயிருப்பதாக.  அதில் ஆறு பட்டணம் அடைக்கல பட்டணமாயிருக்க வேண்டும்.  யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்றும், கானான் தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்க வேண்டும்.  

பிரியமானவர்வர்களே அடைக்கல பட்டணம் என்பது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் யாரும் மனுஷர் கைகளால் நியாயமின்றி தீர்க்கப்படக்கூடாது என்றும், அதனை நியாயந்தீர்க்கிறவர்  கிறிஸ்து என்றும்.  அவரே பழிவாங்குகிறவர் என்றும்,  மனுஷர்கள் யாரும் பழிவாங்கக்கூடாது என்றும் எடுத்துகாட்டும்படியாக மேற்க்கூறப்பட்ட பகுதிகள் எடுத்துக்காட்டுகிறது. 

ஆதலால் பிரியமானவர்களே நாம் யாவரும் அடைக்கலபட்டணமாகிய கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.