தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 58:1

சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபைகளாகிய நாம் கர்த்தரின் நாமத்தை அறிவிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சமூகத்தை விட்டு விலகாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 34:1-29  

கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது,

உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.

உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,

அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.

மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.

உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,

ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாகவைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,

அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.

உங்களுக்குக் கீழ்த்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,

சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல்பரியந்தமும் அதின் கீழ்க்கரையோரமாய்,

அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.

அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.

ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.

மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி:

உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.

அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,

சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,

பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,

தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,

யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,

எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,

செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,

இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,

ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத்தென்னும் பிரபுவும்,

நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

கானான்தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.

மேற்க்கூறப்படுகிற வசனங்களில், கர்த்தர் மோசேயை நோக்கி இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்ல வேண்டிய கட்டளை என்னவென்றால் கானான் தேசமும், அதன் எல்லைகள் உட்பட உங்களுக்கு சுதந்தரமாக கிடைக்கப்போகிறது என்றார்.  ஆதலால் நீங்கள் கானான் தேசத்தில் சேரும் போது சுதந்தரமாக கிடைக்கும் தேசம் எங்கிருந்து துவங்குகிறது, எங்கு முடிவடையும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.  அதென்னவென்றால் 

எண்ணாகமம் 34:12  

அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.

இவ்விதமாக எல்லைகள் உண்டாயிருக்கும்.  இங்கு குறிப்பாக எழுதப்பட்டிருப்பது யோர்தான் பரியந்தமும் போய், உப்பு கடலில் முடியும் என்றார்.  இதிலிருந்து நம் ஒவ்வொருவரும்  யோர்தானை கடந்து, உப்பு கடலில் வந்து தான் தீரவேண்டும்.  எதற்காகவென்றால் கர்த்தராகிய இயேசுவை சுதந்தரராக்கி கொள்ள வேண்டுமானால் உலகமாகிய உபத்திரத்தை கடந்து வசனமாகிய கிறிஸ்துவை அடையமுடியும்.  

மேலும் மோசே சொன்னது ஒன்பதரை கோத்திரத்தாருக்கு கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், சீட்டுப்போட்டு சுதந்நரித்துக் கொள்ள வேண்டிய  தேசங்கள் மேற்கூறப்பட்டவைகள்.  ஆனால்  ரூபன் புத்திரர், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின் படியும், சுதந்தரத்தை பெற்றுக்கொண்டதுமல்லாமல்  மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.  இந்த இரண்டரை கோத்திரத்தாரும் சூரிசோதய திசைக்கு கிழக்கே எரிகோவின் அருகே  உள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.  

மேலும் தேசத்தை பங்கிட்டுக் கொடுக்கும் மனிதரின் நாமங்கள் ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே என்று மோசேயிடம் கர்த்தர் சொன்னதும். மற்றும் தேசத்தை பங்கிடுப்படி ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு தலைவனையும்தெரிந்தெடுத்து, அந்த மனிதரின் நாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் 

எண்ணாகமம் 34:19-29 

அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,

சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,

பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,

தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,

யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,

எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,

செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,

இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,

ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத்தென்னும் பிரபுவும்,

நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

கானான்தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.

மேற் கூறப்பட்டவர்கள்  இஸ்ரவேல் புத்திரருக்கு சுதந்தரந்நை பங்கிட்டு கொடுக்கிறதற்கு கட்டளையிடப்பட்டவர்கள் என்பது விளங்குகிறது.  இவர்களின் திருஷ்டாந்தம் என்னவென்றால் கர்த்த்தரின் நாமத்தை அறிவிக்கிறதர்க்காக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.  இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் எல்லாருக்குள்ளும், முந்தின பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் ஒரே கல்லாகிய சீயோனில் இணைக்கப்பட்டிருப்பதால், நாம் எல்லாரும் கர்த்தரின் நாமத்தை அறிவிக்கிறதற்கு போகும் என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் லேவி கோத்திரத்தார் மாத்திரம் ஆசாரியத்துவ  பணிக்காக தேவன் வேறுப்படுத்துகிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் யாவரும் கர்த்தரின் நாமத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க்கிறதில்  மிகவும் உண்மையாக இருக்கவேண்டும்.  அவ்விதம் யாவரும்   மாறும்படியாக முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.