தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியேல் 34: 14

அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நல்ல மேய்ச்சலை கண்டடைய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் அந்நிய ஜாதிகளை அழித்து கிறிஸ்துவின் மகிமையில் நாம் பிரவேசிப்பது எப்படி என்கிற கருத்துக்களைக் குறித்து தியானித்தோம்.  

ஆனால் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 32:1-10  

ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:

கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.

உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.

உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?

அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.

அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.

அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி:

ரூபன் புத்திரருக்கும், காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கிலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.  அதனால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும், மோசேயையும், ஆசாரியனாகிய எலெயாசாரையும், சபையின் பிரபுக்களையும் நோக்கி கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ,சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களை சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்கு தகுந்த இடம்.  ஆதலால்  எங்கள் ஆடுமாடுகளுக்காக இந்த நாட்டை அடியாராகிய எங்களுக்கு காணியாட்சியாக  கொடுக்க வேண்டும் என்றும், அந்த நாட்டை சுதந்தரிப்பதற்காக, யோர்தான் நதிக்கு அப்புறம் போகும்படியாக, கர்த்தருடைய கண்களில் எங்களுக்கு தயை கிடைத்தருள பண்ணும் என்றார்கள்.  

ஆடு மாடுகளுக்கு தகுந்த இடம் என்பது ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கிற இடமான சபையைக் காட்டுகிறது.  ஆனால் மோசே; ரூபன், காத் புத்திரரிடத்தில், இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தில்  அவர்கள் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தை திடனற்று போகப்பண்ணுகிறதென்ன மேலும் அந்த தேசத்தை பார்ப்பதற்கு காதேஸ்பா்னாவிலிருந்து அனுப்பின போது உங்கள் பிதாக்களும் இப்படி தான் செய்தார்கள்.  அவர்களும் எஸ்கோல் பள்ளதாக்குமட்டும் போய் பார்த்து வந்து இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடி திடனற்று போக பண்ணினார்கள். அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகிறார்.  

இந்த  கருத்துக்களை நாம் பார்க்கும்போது, ஆடுமாடுகளுக்கேற்ற தகுந்த இடம் என்றால் மேய்ச்சல் புறம், தங்கும்படி தொழுவம் உள்ள இடம்.  இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கர்த்தரின் சபை.  கர்த்தரின் சபையில் நாம் கர்த்தரை தொழுது சேவித்து ஆராதிக்கும்படியாக நம்மை பாவமாகிய எகிப்தின் அடிமையிலிருந்து மீட்டு கொண்டு வருகிறார்.  இதனை விளக்கி நம் பிதாக்களை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

நம்முடைய வாழ்க்கையில் இருந்த எல்லா பாரம்பரிய பழக்கவழக்கங்கள், உலக வழிபாடுகள் அத்தனையும் விட்டு முழு  உள்ளமும் கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கும்படி கர்த்தர் சில உதாரணங்களாகிய பட்டணங்களை எடுத்து தேவன் வெற்றிபெற்ற இடத்தை காட்டுகிறார்.  ஆனால் நல்ல மேய்ச்சல் புறம் எது என்று நாம் கண்டறிந்து கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.   ஆனால் அதற்கு இஸ்ரவேலரே திடனற்று போக பண்ணுகிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

ஆம், அது சரிதான்,   இந்த நாளிலும் உண்மையான கர்த்தரின் சத்திய சபைக்கு போக விடாமல் மக்கள் தடுக்கிறார்கள்.  அல்லாமலும் சில குடும்பங்களில் அந்த வீட்டாரே தடுத்து விடுவார்கள்.  அதனால் தேவனுடைய  வார்த்தையானது 

மீகா 7:5-7    

சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.

மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.

நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது எந்த மனுஷனையும் நம்பாமல், கர்த்தருக்கு காத்திருந்து இரட்சிப்பை சுதந்தரிக்க வேண்டும்.  அல்லாமலும் 

சங்கீதம் 23:1-6  

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நாம் தியானித்து நம் ஆத்துமாவுக்கேற்ற போஜனம் நல்கி, நாம் என்றென்றைக்கும் கிறிஸ்துவோடு கூட நிலைத்திருக்கும் படியாக, நல்ல மேய்ச்சலை நாம் கண்டடைவோம்.  அதனைக் குறித்து 

யோவான் 10: 9  

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

மேற்க்கூறிய  வசனங்களால் நாம் இரட்சிக்கப்படும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.